வேலூர், பிப்.19: வேலூர் மாவட்டத்தில் நாளை விவசாயிகள் உழவர் கடன் அட்டை பயன்பெற சிறப்பு முகாம் அனைத்து விஏஓக்கள் அலுவலகத்தில் நடக்கிறது என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளர்.இதுகுறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிப்பதாவது: கிசான் கிரெடிட் கார்டு எனும் விவசாயிகளுக்கான கடன் அட்டையை பயன்படுத்தி விவசாயிகள் தங்களுக்கு தேவையான கடனை பயிர் பெருக்கத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாம். விவசாய நிலங்கள் பட்டா வைத்திருக்கும் விவசாயிகள் இந்த கடன் அட்டை பெற தகுதியுடையவர்கள் ஆவர். நிலத்தின் அளவை பொறுத்தும் பயிர் செய்வதற்கு தேவையான செலவினங்களை கருத்தில் கொண்டு கடன் வழங்கப்படும்.உழவர் கடன் அட்டை அனைத்தும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும், விவசாய கூட்டுறவு சங்கங்களிலும் பெறலாம். இந்த திட்டத்தின் மூலம் ஈட்டுறுதி இல்லாமல் ₹1,60 லட்சம் வரையிலும், நில ஈட்டுறுதி அடிப்படையில் ₹3 லட்சம் வரையிலும் கடன் பெறலாம். இந்த கடன் அட்டையின் கால அளவு 5 ஆண்டுகள் ஆகும். வேறு எந்த திட்டத்திலும் இல்லாத வகையில் கடனை குறித்த காலத்திற்குள் சரியாக செலுத்தும் விவசாயிகளுக்கு 4 சதவீதம் வட்டி வகிதத்தில் கடன் பெற வசதி உள்ளது.