×

வாடகை நிலுவை தொகை செலுத்தாத கடைகளுக்கு 2ம் நாளாக சீல் வைப்பு

ஈரோடு, பிப்.19: ஈரோடு மாநகராட்சிக்கு உரிய வாடகை நிலுவை தொகை செலுத்தாதது தொடர்பாக நேற்று 2ம் நாளாக 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்திற்கு வருவாயை பெருக்கும் வகையில் வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதற்கான வாடகையை மாநகராட்சி நிர்வாகம் விதிமுறைகளின்படி நிர்ணயித்து வருகிறது. வாடகையை மாதந்தோறும் முறையாக செலுத்த வேண்டும் என்ற விதிமுறைப்படி வாடகைக்கு விட்டுள்ளனர். ஆனால், வாடகைதாரர்கள் இந்த தொகையை செலுத்தாமல் இருந்து வருகிறார்கள். வாடகை நிலுவை தொகையை செலுத்த வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்துள்ளனர். ஆனால், வாடகை நிலுவை தொகையை செலுத்தாத நிலையில் நேற்று முன்தினம் ஆணையாளர் இளங்கோவன் உத்தரவின்பேரில் உதவி ஆணையர் (வருவாய்) குமரேசன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் வாடகை நிலுவை தொகையை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கும் பணியை தொடங்கினர்.

இதைத்தொடர்ந்து நேற்று 2ம் நாளாக ஈரோடு பஸ் ஸ்டாண்ட் விசிடிவி ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் வாடகை நிலுவை தொகை செலுத்தாத 4 கடைகளுக்கு சீல் வைத்தனர். வாடகை நிலுவை தொகை செலுத்தாத கடைகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு அந்த கடைகளுக்கும் சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : shops ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி