கோவை, பிப்.19: கோவையில் பதிமலை மற்றும் கோவனூரில் குகை ஓவியங்களை காக்க பாதுகாக்க கூடம் மற்றும் நினைவு சின்னம் அமைக்க பணிக்கு நிதி வழங்கப்படவில்லை. கோவை வாளையார் அருகேயுள்ள குமிட்டிபதி கிராமத்தில் பதிமலை குன்று உள்ளது. இங்கே பழங்கால குகை ஓவியம் காணப்படுகிறது. 3 ஆயிரம் ஆண்டிற்கு முன் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. பதிமலை குன்றில் முருகன் கோயிலும் உள்ளது. இதன் அடிவாரத்தில் ஏராளமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. பழங்காலத்தில் இந்த ஓவியங்களை வரைய வெண்மையான திரவம் பயன்படுத்தியுள்ளனர். யானைகளும் அதனை மனிதர்கள் கட்டுப்படுத்தி அழைத்து செல்லும் காட்சிகளும் ஓவியத்தில் இடம் பெற்றுள்ளது. 4 அடி அகலம், 2 உயரத்தில் குறுக்கும், நெடுக்குமாக ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. பழங்கால மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை எதிர்கால சந்ததிக்கு தகவலாக தெரிவிக்கும் வகையில் இந்த ஓவியம் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. பதிமலை குன்றுகள் பாண்டியர்கள் சிலர் கல்வி பயின்றதாக தகவல் வெளியாகியுள்ளது. வழுக்குபாறை, குமிட்டிபதி, முருகன்பதி, புதுப்பதி, சின்னாம்பதி, நாச்சிபாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் பாண்டியன் பள்ளி என இந்த பகுதியை அழைக்கின்றனர்.
குமிட்டிபதிக்கு அருகே வேலந்தாவளம் உள்ளது. வேளம் என்றால் யானை, தாவளம் என்றால் விற்பனை சந்தை என்ற பொருள் இருப்பதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.