ஈரோடு, பிப்.19:நடப்பு கல்வியாண்டு முடிவடைய 2 மாதம் மட்டுமே நிலுவையில் உள்ள நிலையில் மாணவர்களுக்கு கணித உபகரணப்பெட்டி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு அரசின் சார்பில் இலவச சீருடை, நோட்டு, புத்தகம், பை, பஸ் பாஸ், கணித உபகரணப்பெட்டி மற்றும் லேப்டாப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இதில், இலவச சீருடைகள், நோட்டு, புத்தகங்கள் தவிர மற்றவை உரிய காலத்தில் வழங்கப்படாமல் உள்ளது.குறிப்பாக, மாணவர்களுக்கான பஸ் பாஸ் கடந்த ஓராண்டாக வழங்கப்படாமல் உள்ளது. பழைய பஸ் பாஸ் கொண்டு மாணவர்கள் பயணித்து வரும் நிலை உள்ளது. இந்த வரிசையில் மாணவர்களுக்கு கணித உபகரணப்பெட்டி தற்போது தான் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.