ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்

ஈரோடு, பிப்.19:அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் மார்ச் 6ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கலெக்டர் கதிரவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு அரசு துறை அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களின் ஓய்வூதிய பலன்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவதில் ஏதேனும் குறைகள் இருப்பின் அவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வரும் 6ம் தேதி காலை 10.30 மணிக்கு ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.இக்கூட்டம்  சென்னை நிதித்துறை ஓய்வூதிய இயக்குநர் தலைமையில் நடைபெற உள்ளதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் தங்களது ஓய்வூதிய பலன்கள் குறித்து ஏதேனும் குறைகள் இருப்பின் தங்களது முறையீட்டு மனுக்களை இரண்டு பிரதிநிதிகளுடன் வரும் 25ம் தேதிக்குள் மாலை 5 மணிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நேர்முக உதவியாளர் (கணக்குகள்) நேரிலோ அல்லது தபால் மூலமாகவே அனுப்பி வைக்கலாம்.

Related Stories: