×

சாத்தூர் அருகே கோயில் வரி செலுத்துவது தொடர்பாக கொஷ்டி மோதல் 8 பேர் கைது

சாத்தூர், பிப்.18: சாத்தூர் அருகே கோயில் வரி செலுத்துவதில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் கோயில் வரி செலுத்துவதில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவர் கம்பு மற்றும் ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இதில் நான்கு பேர் படுகாயமடைந்து சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக சாத்தூர் தாலுகா காவல்நிலைய போலீசார் அக்கிராமத்தை சிவராஜ் என்ற டொமினக்(56), சூரியா(20), பாலமுருகன்(38), ஜய்ஸ்மாதா(45), அய்யம்மாள்(48), வினோத்(25), சுதாகர்(21), பாக்கியலட்சுமி(45) ஆகிய 8 பேர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : clash ,Kashmir ,Chatur ,
× RELATED அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டம்