×

விவாகரத்து வாங்கி பிரியும்படி மனைவிக்கு கொலை மிரட்டல் கணவன் மீது வழக்குப்பதிவு

விருதுநகர், பிப்.18: விவாகரத்து வாங்கி பிரிந்து செல்லும்படி மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டியை சேர்ந்த வேல்முருகன்(39), விஜயலட்சுமி(29) இவரும் கணவன், மனைவி. இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் வேல்முருகன், கலைச்செல்வி என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வருவதாகவும் விஜயலட்சுமியை விவாகரத்து வாங்கக்கோரி பிரச்சனை செய்து வருவதாக கூறப்படுகிறது. நேற்று ஓ.கோவில்பட்டி சர்ச் அருகில் நடந்து சென்ற விஜயலட்சுமியை வழிமறித்து வேல்முருகன் அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக ஆமத்தூர் போலீசில் விஜயலட்சுமி அளித்த புகாரில் போலீசார் வழக்குபதிவு செய்து வேல்முருகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்...