×

டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் தம்பதி படுகாயம்

பெரியகுளம், பிப். 18: பெரியகுளம் அருகே, டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் தம்பதி படுகாயம் அடைந்தனர். பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் (45). இவரது மனைவி தனம். இவர்கள் இருவரும் டூவீலரில் நேற்று பெரியகுளம் சென்று கொண்டிருந்தனர். எ.புதுப்பட்டி அருகே, சாலையில் திரும்ப முயன்றபோது பின்னால் வந்த லாரி, கணேசனின் டூவீலர் மீது மோதியது. இதில், கணேசன் மற்றும் அவரது மனைவி படுகாயமடைந்தனர். காயமடைந்த இருவரையும் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கார் டிரைவர் தங்கராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED இடுக்கியில் இன்று பிரசாரம் நிறைவு