×

கார் கவிழ்ந்து ஒருவர் பலி

இளையான்குடி, பிப்.18: இளையான்குடி அருகே கார் கவிழந்து ஒருவர் உயிரிழந்தார். சிங்கம்புணரி தாலுகா எம்.தும்பம்பட்டியை சேர்ந்தவர் தில்லைநாயகம் மகன் பாலு(45). தனது குடும்பத்தினருடன் நேற்று காலை ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோயிலுக்கு சாமி கும்பிட காரில் சென்றார். காரை பாலு ஓட்டி வந்தார். தச்சனேந்தல் வழியாக தாயமங்கலம் விலக்கு பகுதியில் வந்தபோது, கார் தனது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில்  பலத்த காயமடைந்த பாலுவை சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். மற்றவர்கள் லேசான காயம் அடைந்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து இளையான்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED நாய் குட்டிகளுக்கு 3 மாதத்தில் தடுப்பூசி போட அறிவுறுத்தல்