×

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, பிப்.18:  சிவகங்கை அரண்மனைவாசல் முன்பு மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், எல்ஐசி உள்ளிட்ட மத்திய பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய பட்ஜெட் மற்றும் மக்களுக்கு பயனில்லாத மாநில பட்ஜெட்டை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் கண்ணகி தலைமை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏக்கள் குணசேகரன், தங்கமணி, மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தண்டியப்பன் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துராமலிங்கபூபதி, ஆறுமுகம், அய்யம்பாண்டி, திருநாவுக்கரசு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் அழகர்சாமி, சண்முகப்ரியா, சுரேஷ், மாணிக்கம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாகிகள் கோபால், விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : parties ,state governments ,
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...