×

2019ம் ஆண்டிற்கான தாசில்தார் பட்டியல் வெளியிட வலியுறுத்தல்

சிவகங்கை, பிப்.18: சிவகங்கையில் தமிழ்நாடு வருவாய்த்துறை குரூப் 2 நேரடி நியமன அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் நாகேந்திரமுருகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வினோத்குமார் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் மெஹர்அலி முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் தர்மராஜ் தீர்மானங்களை முன்மொழிந்து சிறப்புரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர் ஜெகதீசன், நிர்வாகிகள் சங்கர், கமரூதீன், பாரதி, மருதுபாண்டி, ராமநாதன், பூங்கோதை, ரேவதி, சுந்தரமூர்த்தி, மலைச்சாமி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி அரசாணை 133, அரசாணை 87ஐ  அமல்படுத்தி 2004 முதல் திருத்திய துணை தாசில்தார் மற்றும் தாசில்தார் பட்டியலை பிப்ரவரி மாதத்திற்குள் வெளியிட வேண்டும். 2018ம் ஆண்டு துணை தாசில்தார் பட்டியலில் காத்திருப்பில் உள்ளவர்களுக்கு காலியாக உள்ள இடங்களில் பணியிடம் வழங்க வேண்டும். ஓராண்டு நிறைவு பெற்ற தாசில்தார் மற்றும் துணை தாசில்தார்களை இடமாற்றம் செய்ய வேண்டும். தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் கூர்மை பணியிடங்களில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து ஒரே இடங்களில் பணிபுரியும் வருவாய் உதவியாளர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.

Tags :
× RELATED உலக புத்தக தின விழா