பள்ளிக்கு சென்ற மாணவன் மாயம்

திருமங்கலம், பிப்.18: திருமங்கலம் அடுத்துள்ள தோப்பூரினை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகன் மனோஜ்குமார்(15). திருமங்கலம் அரசுமேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமைக வழக்கம் போல் பள்ளிக்கு சென்றவர், அதன்பின்பு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் மாணவன் கிடைக்காததால் அவனது தந்தை ஈஸ்வரன் கொடுத்த புகாரில் திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: