×

திருமங்கலம் அருகே பழிக்குப் பழி வாங்க வீடு புகுந்து வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

திருமங்கலம், பிப்.18: திருமங்கலம் அருகே எட்டு ஆண்டுகளுக்கு முன்பு உறவினரை வெட்டி கொலை செய்த வழக்கில் தொடர்புடைய வாலிபரை பழிக்குபழியாக சிலர் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலம் அருகேயுள்ளது குராயூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பு. இவரது அண்ணன் போஸ். இவர்களுக்குள் இடபிரச்னை இருந்து வந்ததால் முன்விரோதம் இருந்துள்ளது. இந்தநிலையில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு போஸ் மனைவி சீதாலட்சுமியை கருப்பு மகன் முருகன் (30) வெட்டி கொலை செய்துள்ளார். இதில் முருகன் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வந்துள்ளார். வழக்கு நிலுவையில் உள்ளது.இந்தநிலையில் முருகன் நேற்று காலை வழக்கம் போல் கோர்ட்டிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் உணவு அருந்திவிட்டு படுத்து உறங்கி கொண்டிருந்தவரை கொலை செய்யப்பட்ட சீதாலட்சுமியின் உறவினர்கள் சிலர் வீடு புகுந்து சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்தவெள்ளத்தில் முருகன் மயங்கினார். அக்கம்பக்கத்தினர் மீட்டு அவரை திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை நடத்தி முருகனை வெட்டிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags : Sarumani ,Tirumangalam ,
× RELATED தண்ணீர் தொட்டியில் விழுந்த மயில் மீட்பு