ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

மதுரை, பிப்.18: மதுரையில் ரயிலில் அடிபட்டு முதியவர் உயிரிழந்தார்.மதுரை அழகப்பன் நகர் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது உடல் முழுவதும் சிதைந்த நிலையிலிருந்தது. அவரது உடலை ரயில்வே போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் பழங்காநத்தம் வடக்குத் தெருவைச் சேர்ந்த விசாகம்(80) என்பது தெரிந்தது. முத்துப்பட்டியில் உள்ள உறவினரை பார்க்க விசாகம் அடிக்கடி செல்வது வழக்கமாம். நேறறு முன்தினம் முத்துப்பட்டி செல்வதாகக் கூறி சென்றவர், ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து விசாகத்தின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ரயில்வே எஸ்.ஐ. முத்துமுனியாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: