×

பழநி கல்லூரியில் இலக்கிய படைப்பு

பழநி, பிப். 18: பழநி அருகே தாழையூத்து சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையின் சார்பில் மாநில அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி தலைவர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். தாளாளர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் யாஸ்மீன்பர்வீன் வரவேற்று பேசினார். முதல்வர் சங்கர்அழகு கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார். மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் பழனிராஜன் தற்கால இலக்கிய படைப்பும்- படைப்பாளரும் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதில் பழநி, உடுமலை, திருப்பூர், திண்டுக்கல் பகுதிகளை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட கல்லூரிகளின் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழ்த்துறை பேராசிரியர் ஜோதிமணி நன்றி கூறினார்.

Tags : Palani College ,
× RELATED பழநியில் 148 அடி நீளத்தில் 540 ஓவியங்கள் -கல்லூரி மாணவி சாதனை