கொடைக்கானல், பிப். 18: கொடைக்கானல் பூம்பாறையில் குழந்தை வேலப்பர் கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து ெகாண்டனர். கொடைக்கானல் பூம்பாறையில் குழந்தை வேலப்பர் கோயில் உள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு தேரோட்ட விழா கடந்த பிப்.9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து பிப்.10ம் தேதி அன்ன வாகனத்திலும், பிப். 11ம் தேதி மயில் வாகனத்திலும், பிப். 12ம் தேதி காளை வாகனத்திலும், பிப். 13ம் தேதி ஆட்டுக்கிடா வாகனத்திலும், பிப்.14ம் தேதி பூத வாகனத்திலும், பிப். 15ம் தேதி சிங்க வாகனத்திலும், பிப்.16ம் தேதி யானை வாகனத்திலும் குழந்தை வேலப்பரான முருகப்பெருமான் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்ட விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக காலை அலங்கரிக்கப்பட்ட தேரின் முன்பு பூக்கள் கல்லால் ஆன பாதை அமைக்கப்பட்டது.