நெல்லை அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

நெல்லை, பிப். 18: சாம்பவர்வடகரை அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார். சாம்பவர்வடகரை அடுத்துள்ள வேலாயுதபுரத்தை சேர்ந்த தாஸ் மகன் விஜய்(26), கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து ஊர்மேலழகியானில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். வலிப்பு நோய் பாதிப்பு இருந்த விஜய், குளித்துக் கொண்aடிருக்கும்போது வலிப்பு வந்ததால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து விரைந்து வந்த சாம்பவர்வடகரை போலீசார், உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எஸ்ஜ செல்வி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: