×

சீவலப்பேரி பள்ளி அருகே ஆழ்குழாய் கிணறு அருகன்குளம் மேலூரில் வாய்க்கால் ஆக்கிரமிப்பு

நெல்லை, பிப்.18: நெல்லை அருகே அருகன்குளம் மேலூரில் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அருகன்குளம் மேலூர் பகுதி மக்கள் அளித்த மனு விபரம்: நாரணம்மாள்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அருகன்குளம் மே லூரில் வடிகால் நீர் வாய்க்கால் மூலமாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது வடிநீர் கால்வாய் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊருக்குள் வரும் தண்ணீர் வெளியேற முடியவில்லை. இதனால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி வருகின்றன. எனவே வாய்க்காலை போர்கால அடிப்படையில் சுத்தப்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வர வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சீவலப்பேரி மேட்டுபச்சேரி தெற்கு தெருவில் உள்ள காமராஜர் துவக்கப்பள்ளி செயலாளர் அப்பகுதி மக்களோடு அளித்த மனுவில், ‘‘ எங்கள் பள்ளியில் 35 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த 10ம் தேதி மாணவர்களின் கழிப்பிடத்திற்கு அருகில் 300 அடி ஆழத்தில் ஒப்பந்தக்காரர்கள் ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ளனர். பள்ளிக்கு அருகாமையில் உள்ள இக்கிணற்றால் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதை தடுத்து நிறு த்த வேண்டும்.’’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : school ,Sivalaperiyar ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி