தச்சநல்லூரில் வீட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு வலை

நெல்லை, பிப். 18: தச்சநல்லூரில் செல்போன் கடை உரிமையாளரின் வீட்டு பூட்டை உடைத்து பத்து பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தச்சநல்லூர் தெற்கு சிதம்பரநகர் ஏழாவது தெருவைச் சேர்ந்தவர் கணபதி மகன் சதீஷ் (36). இவர் நெல்லை சந்திப்பில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 13ம் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்றார்.இதனையடுத்து நேற்று முன்தினம் மதியம் வீட்டிற்கு சதீஷ் வந்த போது அதிர்ச்சியடைந்தார். ஏனெனில் வீடு மற்றும் பீரோவின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் தாறுமாறாக சிதறி கிடந்தன. இதனையடுத்து அவர் வீட்டிற்குள் சென்று பீரோவை பார்த்த போது அதிலிருந்த 10 பவுன் தங்க நகை திருட்டு போனது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.2.5 லட்சமாகும். இதுகுறித்து நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீசில் சதீஷ் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: