பைக்கில் இருந்து விழுந்து தீயணைப்பு வீரர் படுகாயம்

நெல்லை, பிப். 18: நெல்லை அருகே உள்ள தேவர்குளத்தை சேர்ந்தவர் சண்முகம் மகன் மகாராஜன் (35). இவர், குமரி மாவட்டம் குழித்துறை தீயணைப்பு நிலையத்தில் வீரராக பணியாற்றி வருகிறார். நேற்று பைக்கில் தேவர்குளத்தில் இருந்து குழித்துறைக்கு சென்று கொண்டிருந்தார். நாங்குநேரியை அடுத்த வாகைக்குளம் நம்பி ஆற்றுப்பாலம் அருகே செல்லும்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை, அவ்வழியாக சென்றவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: