பிளஸ் 1 மாணவர் தற்கொலை

நெல்லை, பிப். 18: திருவேங்கடம், மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் காளிராஜ். சங்கரன்கோவில் தாசில்தாருக்கு டிரைவராக இருந்து வருகிறார். இவரது மகன் அஜய் (16). தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். தேர்வுகளில் அஜய் நல்ல மதிப்பெண்கள் எடுக்கவில்லை. இதனால் அவரை காளிராஜ் திட்டியுள்ளார். இதில் மனம் உடைந்த அவர் கடந்த 14ம் தேதி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவருக்கு திருவேங்கடம் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மதியம் இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இதுகுறித்து திருவேங்கடம் எஸ்ஐ சத்தியவேந்தன் விசாரணை நடத்தினார்.

Related Stories: