லாரி மோதி முதியவர் சாவு

நெல்லை, பிப். 18: புளியங்குடி அருகே உள்ள திருவேட்டநல்லூர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் சேர்மன் (61). இவர், நேற்று மதியம் சிவகிரி நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது நெல்லையில் இருந்து வாசுதேவநல்லூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு ரேஷன் பொருட்கள் ஏற்றி வந்த லாரி குடோன் அருகே திரும்பும்போது சேர்மன் மொபட் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாசுதேவநல்லூர் எஸ்ஐ சண்முகவேல் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: