நெல்லை, பிப்.18: நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா விடுத்துள்ள அறிக்கை: தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆணைக்கிணங்க இன்று (18ம் தேதி) கீழ்கண்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஜெயலலிதா 72வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் காலை 9 மணிக்கு மகளிருக்கான சுழல் பந்தாட்டப்போட்டி மற்றும் தமிழகஅரசின் சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சி துவக்க விழா நடக்கிறது. காலை 10 மணிக்கு பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான ஆண்களுக்கான கபடி போட்டி துவக்க விழா நடக்கிறது. காலை 11 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு ம.தி.தா இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பிற்பகல் 3 மணிக்கு பாளையங்கோட்டை சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பிற்பகல் 4 மணிக்கு பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் மகளிருக்கான சுழல் பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிகளில் தலைமைக்கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.எனவே மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.