×

நேஷனல் பொறியியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம்

கோவில்பட்டி, பிப். 18: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் பெற்றோர்-ஆசிரியர் சங்கக் கூட்டம் நடந்தது.  கல்லூரி இயக்குநர் சண்முகவேல் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் காளிதாஸ் முருகவேல் முன்னிலை வகித்தார். முன்னதாக கல்லூயில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் மற்றும் துறை பேராசிரியர்கள் இடையே கலந்துரையாடல் நடந்தது. தகவல் தொழில்நுட்பத் துறை உதவிப் பேராசிரியை அனிதா வரவேற்றார். பெற்றோர்-ஆசிரியர் சங்க ஒருங்கிணைப்பாளர் ரமணன். பொதுக்குழு கூட்ட அறிக்கை வாசித்தார். அறிவியல் மற்றும் பொறியியல்  துறை உதவிப் பேராசிரியை நஸ்கத் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரித் தாளாளர் அருணாசலம், கல்லூரி இயக்குநர், முதல்வர் வழிகாட்டுதலின் பேரில் பெற்றோர்- ஆசிரியர் சங்க ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Tags : meeting ,Parent Teacher Association ,National College of Engineering ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...