உடன்குடியில் கேட்பாரற்ற பைக் உரிமையாளரிடம் ஒப்படைப்பு

உடன்குடி, பிப். 18: உடன்குடியில் பல நாட்களாக கேட்பாரற்று நின்றிருந்த பைக், தினகரன் செய்தி எதிரொலியாக உரிமையாளரிடம்  ஒப்படைக்கப்பட்டது.  உடன்குடி சத்யமூர்த்தி பஜாரில் கடந்த  ஒருவாரத்திற்கும் மேலாக பைக் ஒன்று சாலையோரம் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது.   இதனிடையே இந்த பைக்கின் உரிமையாளரும்  சாத்தான்குளம் அடுத்த தட்டார்மடத்தைச் சேர்ந்தவரும் போர்வெல் தொழில் செய்துவருபவருமான சரவணன் என்பவர் தன்னிடம் வேலைபார்த்து வரும் வெளியூரைச்  சேர்ந்த வேல் என்பவரிடம் பொருட்கள் வாங்கிவரும் பொருட்டு கடந்த வாரம் பைக்கை கொடுத்து அனுப்பியுள்ளார். ஆனால், வேலோ  எவ்வித தகவலும் தெரிவிக்காமல் பைக்கை உடன்குடியில் கேட்பாரற்று விட்டுச் சென்றார். இதுகுறித்து சரவணன் அளித்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீசார் விசாரணை  நடத்தி வந்தனர். இந்நிலையில் தினகரனில் வெளியான செய்தியை அடுத்து பைக் மீட்கப்பட்டு அதன் உரிமையாளரான சரவணனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து பைக்கை தனது  வீட்டிற்கு கொண்டுசென்ற அவர், செய்தி வெளியிட்டு உதவிய தினகரன் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தார்.

Related Stories: