மங்களகிரி ஜோசப் பள்ளியில் பல்சமய மன்ற விழா

புதுக்கோட்டை, பிப் 18:புதுக்கோட்டை அருகே உள்ள மங்களகிரி செயின்ட் ஜோசப் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் பல்சமய நல்லிணக்கக் கூட்டம் நடந்தது. பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் ரூபர்ட் அடிகளார் வரவேற்றார். கூட்டத்தில் இந்து சமயம் சார்பாக வாசுகி, இஸ்லாம் சார்பாக உமர்அலி, கிறிஸ்தவ சமயம் சார்பாக அருட்தந்தை. ரூபர்ட் அடிகளார் ஆகியோர் அன்பு, மனிதநேயம், ஒற்றுமையோடு இருந்தால் மனித மனங்கள் பக்குவப்படும்  என அழகாக எடுத்துரைத்தனர். கூட்டத்தின் போது மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் பாடல்கள், விழிப்புணர்வு நாடகம் மற்றும் நடனநிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தது. ஒன்பதாம்  வகுப்பு மாணவி அருணாச்சலம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளர்  நிர்மல்ராணி, வழிகாட்டி மெல்ரோஸ் செய்திருந்தனர்.

Related Stories: