×

தர்மபுரி அருகே குடிநீர் தொட்டியில் விஷம் கலந்ததாக பெண் புகார்

தர்மபுரி, பிப்.18: தர்மபுரி அருகே குடிநீர் தொட்டியில் விஷம் கலந்ததாக பெண் கொடுத்த புகாரின் பேரில், டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் ஏ.கொல்லஅள்ளியை சேர்ந்தவர் ஜெகநாதன் மனைவி லதா(46). இவர் கடகத்தூரில் வளையல் கடை நடத்தி வருகிறார். இவரது கணவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். லதாவிற்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில வருடங்களாக லதாவின் உறவினருக்கும் லதாவிற்கும் இடையே நிலம் வாங்கியது தொடர்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 15ம் தேதி லதா, கடகத்தூரில் உள்ள தனது வளையல் கடைக்கு சென்றுவிட்டார். மாலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்த போது லதாவின் மகள் லலிதா குடிநீர் தொட்டியில் தண்ணீர் கலங்கலாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் குடிநீர் தொட்டியில் இருந்து மருந்து வாடை வீசியுள்ளது. தொட்டியில் இருந்த தண்ணீரை காலி செய்த போது தொட்டியின் உள்ளே மருந்து பாட்டில் இருந்தது. இது தொடர்பாக லதா நேற்று தர்மபுரி டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் டவுன் போலீசார் லதாவின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Dharmapuri ,drinking water tank ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...