×

மதுவிலக்கு அமல்பிரிவு சார்பில் போதை பொருள் தீமை குறித்த விழிப்புணர்வு

அரூர், பிப்.18: அரூர் மதுவிலக்கு அமல்பிரிவு சார்பில், கள்ளச்சாராயம் மற்றும் போதை மருந்துகளால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நடந்தது. அரூர் மதுவிலக்கு அமல்பிரிவு சார்பில், கள்ளச்சாராயம் மற்றும் போதை மருந்துகளால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இதனையொட்டி, அரூர் பேருந்து நிலையம், கச்சேரிமேடு, கடைவீதி உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில், போதை மற்றும் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. மேலும் கள்ளச்சாராயம் விற்பனை குறித்து அறிய வந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, எஸ்எஸ்ஐ ரமேஷ், ஏட்டு தங்கமுத்து, மாது, சின்னசாமி, பிரகாசம், சரவணன், செவ்வந்தி, செல்வி ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா