ஓசூர், பிப்.18: கிருஷ்ணகிரி எம்பி டாக்டர் செல்லகுமார், ஓசூர் பகுதியில் சுற்றுப்பயணம் செய்து சுகாதாரம் குறித்து திடீர் ஆய்வு செய்தார். மேலும், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற்றார். ஓசூர் வெங்கடேஷ் நகர், தோட்ட கிரி ரோடு, அலசநத்தம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவர், பல்வேறு பகுதிகளில் சுகாதாரமின்மை குறித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அவருடன் காங்கிரஸ் மாவட்ட தலைவர் முரளிதரன், மேற்கு மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் இளங்கோ, தமிழ்வாணன், சுரேஷ், அரவிந்த், மக்சூத், முத்து, முருகேஷ், மகளிரணி சரோஜா, அம்ருத், மாதேஷ், குமார், திலிப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.