×

கெலமங்கலம் விவசாயிகள் உழவர் கடன் அட்டை பெற சிறப்பு முகாம்

தேன்கனிக்கோட்டை, பிப்.18: கெலமங்கலம் வட்டார விவசாயிகள் உழவர் கடன் அட்டை பெற, வங்கிகளில் சிறப்பு முகாம் 24ம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து கெலமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஜான் லூர்தர் சேவியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பிரதம மந்திரியின் கவுரவ நிதியுதவி திட்டத்தின் கீழ், அனைத்து தகுதியுள்ள விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ₹6ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற, வங்கிகள் மூலமாக உழவர் கடன் அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து வங்கி கிளைகளிலும் வரும் 24ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்புக்கும் உழவர் கடன் அட்டைகள் வழங்கப்படுகிறது. எனவே, இதுவரை கெலமங்கலம் வட்டாரத்தில் உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் பயன்பெறாத விவசாயிகள், அந்தந்த பகுதியில் உள்ள வங்கி கிளையை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

Tags : Kelamangalam Farmers Special Camp ,Dillard ,
× RELATED புதிய நிர்வாகிகள் ஆணையருடன்...