ராசிபுரம், பிப்.18: ராசிபுரம் ராசி அகரம் யூத் அசோசியேஷன் - சேலம் கே.எஸ்.எம்.ரத்தவங்கி இணைந்து ரத்தான முகாமை, ராசிபுரம் அகர மஹாலில் நடத்தியது. இந்த முகாமில், அகரம் வெள்ளாஞ்செட்டியார் மகாஜன சங்க தலைவர் கணேசன் தலைமை வகித்தார். ராசிபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர் ஐயப்பன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று முகாமினை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் 50பேர் ரத்ததானம் செய்தனர்.