×

இ.,கம்யூனிஸ்ட் கட்சி தெருமுனை கூட்டம்

ராசிபுரம், பிப்.18: வெண்ணந்தூர் ஒன்றிய பகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. வெண்ணந்தூர் ஒன்றிய பகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெருமுனை பிரசார கூட்டம், கட்சி கொடியேற்று விழா நடந்தது. இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் குழந்தான் தலைமை வகித்தார். கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் மணிவேல் பங்கேற்று சர்க்கார் தோப்பு, மின்னக்கல், வாய்க்கால் பட்டறை, நடுப்பட்டி நரிக்கல் கரடு போன்ற பகுதிகளில் கொடியேற்றி வைத்து, பெயர் பலகை திறந்து வைத்தனர். மேலும், குடியிரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராகவும், விலைவாசியை கட்டுப்படித்தக் கோரியும், மத்திய, மாநில அரசின் பட்ஜெட்டை கண்டித்தும் காமராஜர் சிலை அருகே தெருமுனை பிரசாரக் கூட்டம் நடந்தது. இதில் ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி, ராசிபுரம் நகர செயலாளர் மணிமாறன், கட்சி நிர்வாகிகள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : E. ,Communist Party ,Thermopolitan Meeting ,
× RELATED திருப்பூரில் பாஜக அராஜகம்: தேர்தல்...