×

கழிவறைக்கு சென்றபோது எடுத்துச்சென்றார் மெழுகுவர்த்தி தீயில் கருகிய சிறுமி சாவு

சேலம், பிப்.18: சேலம் ஏற்காட்டில் கழிவறைக்கு சென்ற போது தீயில் கருகிய சிறுமி சிகிச்சை பலனிற்றி உயிரிழந்து சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், ஏற்காடு எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் லீலாவதி (17). 9ம் வகுப்பு வரை படித்த இவர் வீட்டில் இருந்து வந்தார். கடந்த மாதம் 7ம் தேதி எம்ஜிஆர் நகரில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. அன்று மாலை கழிவறைக்கு சென்ற லீலாவதி மெழுகுவர்த்தியை எடுத்துச் சென்றார். அப்போது, திடீரென மெழுகுவர்த்தி லீலாவதியின் மேல் விழுந்தது, இதில் உடையில் தீப்பிடித்து உடல் முழுவதும் பரவியது. இதனால் லீலாவதி வலியால் அலறித்துடித்துள்ளார்.
தொடர்ந்து, லீலாவதியின் சத்தம் கேட்டு வீட்டின் அருகில் இருந்த அக்கம், பக்கத்தினர் மண் கொட்டியும், தண்ணீர் ஊற்றியும் தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் லீலாவதிக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துமவனைக்கு அனுப்பி வைத்தனர். இங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு லீலாவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுமார் 40 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் லீலாவதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ெபரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்