×

பூலாம்பட்டியில் பேரூர் திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம்

இடைப்பாடி, பிப்.18: இடைப்பாடி அருகே பில்லுக்குறிச்சியில், பூலாம்பட்டி பேரூர் திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.  பேரூர் அவைத் தலைவர் சம்பத் தலைமை தாங்கினார்.  செயலாளர் பழனிசாமி வரவேற்றார். இதில் சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம். செல்வகணபதி, மேற்கு மாவட்ட திமுக  அவைத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கோபால் ஆகியோர் பேசினர். இதில், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன்,  துணை செயலாளர்கள் சுந்தரம், சம்பத்குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கருணாநிதி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, இடைப்பாடி நகர செயலாளர் பாட்ஷா, முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் அழகுதுரை, பூவாக்கவுண்டர், குப்புசாமி, முன்னாள் பேரூர் செயலாளர்கள் கந்தசாமி, வெங்கடாசலம், விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் நாகராஜன், முன்னாள் பேரூராட்சி தலைவர் கருணாநிதி, பேரூர் துணை செயலாளர் செல்வி, முன்னாள் கவுன்சிலர்கள் பார்த்திபன், செந்தில்குமார், நடேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : committee meeting ,Parur DMK ,Poolampatti ,
× RELATED டூவீலர் மெக்கானிக் சங்க மாநில செயற்குழு கூட்டம்