பாபநாசம், பிப். 18: பாபநாசம் அருகே திருவையாத்துக்குடியில் நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு நெல் கொள்முதல் செய்ய காலமாமதமாவதால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், விவசாயத்தில் ஈடுபடுவது என்பதே இப்போது சிரமமாக உள்ளது. ஆள் தட்டுப்பாடு, உர விலை உயர்வு, இயற்கை அபாயம், நெல் அறுவடை இயந்திரம் கிடைப்பதில் தாமதம் இவற்றையெல்லாம் கடந்து தான் அறுவடை செய்து கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வருகிறோம்.