×

மக்கள் அச்சம் திருவையாத்துக்குடியில் நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும்

பாபநாசம், பிப். 18: பாபநாசம் அருகே திருவையாத்துக்குடியில் நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு நெல் கொள்முதல் செய்ய காலமாமதமாவதால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், விவசாயத்தில் ஈடுபடுவது என்பதே இப்போது சிரமமாக உள்ளது. ஆள் தட்டுப்பாடு, உர விலை உயர்வு, இயற்கை அபாயம், நெல் அறுவடை இயந்திரம் கிடைப்பதில் தாமதம் இவற்றையெல்லாம் கடந்து தான் அறுவடை செய்து கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வருகிறோம்.

கடந்த 10 நாட்களாக நெல் கொள்முதல் நிலையம் முன் கொட்டி வைத்து படுதா போட்டு மூடி காவல் காக்கிறோம். ஆனால் இன்றாவது நெல்லை கொள்முதல் செய்வார்களா என்பது தெரியவில்லை என்கிறார். இதே நிலை தான் பாபநாசம், ராஜகிரி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ளது. எனவே விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Thiruvaiyadikudi ,
× RELATED திருவையாத்துக்குடியில் குண்டும் குழியுமாக மாறிய சாலை