கும்பகோணத்தில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கும்பகோணம், பிப். 18: கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது.இதுகுறித்து கும்பகோணம் ஆர்டிஓ வீராச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 19ம் தேதி நடக்கிறது. வருவாய் கோட்டாட்சியர் தலைமை வகிக்கிறார். எனவே குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது குறைகள், ஆலோசனைகளை வழங்கி பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: