×

பஸ் மோதி தொழிலாளி பரிதாப பலி

மயிலாடுதுறை, பிப். 18: நாகை மாவட்டம் மயிலாடுதுறை புளியந்தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் விக்னேஷ்(26). வெல்டிங் தொழில் செய்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு இவர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மயிலாடுதுறையில் இருந்து நன்னிலம் சென்ற நோக்கி பஸ் விக்னேஷ் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் அந்த இடத்திலேயே இறந்தார். இது குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags : Bus collision ,
× RELATED வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில்...