×

கரூர் பைபாஸ் மேம்பாலத்தில் சமூக விரோதிகள் அட்டகாசம் போலீசார் ரோந்து செல்ல கோரிக்கை

கரூர், பிப்.18: கரூர் பைபாஸ்மேம்பாலத்தில் சமூக விரோதிகள் நடமாட்டத்தை தடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர்-சேலம் பைபாஸ்சாலையில் ரயில்வே மேம்பாலம் உள்ளது.இந்த மேம்பாலத்தின் கீழ்பகுதி வழியாக பெரியகுளத்துப்பாளையம், சின்னகுளத்துப்பாளையம், வெங்கமேடுபகுதிக்கு செல்லவேண்டியவர்கள் நடந்தும், இருசக்கர வாகனத்திலும் சென்றுவருகின்றனர். பாலத்தின்கீழ்பகுதியில் போதுமான பாதுகாப்பில்லை. சமூக விரோதிகள் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் மதுஅருந்திவிட்டு அட்டகாசம் செய்கின்றனர். போதையில் ரகளையிலும் ஈடுபடுகின்றனர். போலீசார் இப்பகுதியில் அடிக்கடி ரோந்து சென்று சமூக விரோதிகளைகண்காணித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : activists ,police patrol ,Karur Bypass ,
× RELATED கோவில்பட்டியில் இந்தியா கூட்டணி...