கரூர் மாவட்டம் மணவாடி பகுதியில் உள்ள அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: இந்த பகுதியில் அரசால் வழங்கப்பட்ட வீட்டு மனையில் வசித்து வந்தேன். உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் மகள் வீட்டுக்கு சென்ற விட்டேன். சில மாதங்கள் கழித்து வந்து பார்த்த போது, எனது வீட்டில் வேறு ஒருவர் வசித்து வருகிறார். வெளியேறவும் மறுக்கிறார். இது குறித்து பலமுறை மனு கொடுத்துள்ளேன். எனவே, விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.