விழுப்புரம், பிப். 18: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பணியாற்றிய விஏஓக்களுக்கு செலவினத்தொகை வழங்கிட ஆட்சியருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட பொதுக்குழுக்கூட்டம் மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் வெற்றிகொண்டான், லட்சுமணன், சஷ்டிகுமரன், உமாசங்கர், பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் புஷ்பகாந்தன் வரவேற்றார். மாநில தலைவர் சந்தானகிருஷ்ணன் விளக்க உரையாற்றினார். முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சுப்பிரமணின், மாநில செயலாளர் சுரேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கள்ளக்குறிச்சி நிர்வாகிகள் கருணாநிதி, வரதராஜன், ரஞ்சித்குமார், சத்தியமூர்த்தி, திருவெங்கடேஷ், உமாபதி, அன்பு, ரூபலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.