இலவச சைக்கிள் வழங்கும் விழா

திருக்கோவிலூர், பிப். 18: திருக்கோவிலூர் அங்கவை சங்கவை மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் யமுனாபாய், கூட்டுறவு சங்க துணைத்தலைவர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் காமராஜ் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் 756 மாணவிகளுக்கு இலவச சைக்கிளை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்ரமணியன் வழங்கி, மாணவிகள் இந்த வருடமும் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து பள்ளிக்கு நற்பெயரை வாங்கி தரவேண்டும் என்று அறிவுறுத்தினார். இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: