ரிஷிவந்தியம், பிப். 18: ரிஷிவந்தியம் அருகே வெங்கலம் கிராம எல்லையில் செல்லியம்மன் கோயில் குளம் உள்ளது. இக்குளம் சுமார் 85 சென்ட் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த குளம் பராமரிப்பின்றி நீண்ட நாட்களாக செடி, கொடிகள், மரங்கள் படர்ந்து வளர்ந்து புதர்மண்டிக் கிடக்கிறது. மேலும் குளம் என்பதே அடையாளம் காண முடியாத அளவுக்கு மண்மேடுகள் படிந்து கிடக்கின்றன. இக்குளம் திருக்கோவிலூர்-கள்ளக்குறிச்சி பிரதான சாலையையொட்டி ரிஷிவந்தியம் அருகில் உள்ளதால் இப்பகுதியில் உள்ள ஒரு சில நபர்கள் குளத்தை ஆக்கிரமித்து கட்டிடங்கள், கடைகளை கட்டி வருகின்றனர். இக்குளம் ஆக்கிரமிப்பால் குளத்துக்கு வரும் மழைநீரை சேமிக்க வழியில்லாமல் தற்போது வறண்டு காணப்படுகிறது.