×

வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்

சிதம்பரம், பிப். 18:  மாற்றுத்திறனாளிகள் புதுவாழ்வு நலச் சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் சண்முகம், பாலமுருகன், மருதவாணன், மணிகண்டன் உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்டோர் நேற்று சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் சிதம்பரம் சப்- கலெக்டர் விசுமகாஜனை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்கு தொழில் செய்து பிழைக்க வசதியாக மக்கள் அதிகமாகக் கூடும் பஸ் நிலையம், தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனை போன்ற இடங்களில் வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். குறிப்பாக இந்த இடங்களில் ஆவின் பாலகம் பெட்டி கடைகள் மூலம் வைத்து நடத்தப்படவுள்ளது. இவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். அதுபோல் வீடுகள் இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு மனைப் பட்டாவுடன் கூடிய இலவச வீடு உள்ளிட்டவற்றை கட்டித்தர வேண்டும். இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED `முதியோர் பென்சன் ₹8 ஆயிரம்...