×

பள்ளிகளுக்கு இடையிலான மாவட்ட அளவிலான கராத்தே போட்டி

கூடலூர்,பிப்.18: மாவட்ட அளவிலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையிலான கராத்தே போட்டிகள் கூடலூர் பாரத் கம்யூனிட்டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கென் புகாய் ஷிட்டோரியூ கராத்தே அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் கூடலூர், பந்தலூர், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளிலிருந்து 25க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

சர்வதேச போட்டிகளில் பயன்படுத்தப்படும் மேட் தளம்  உபயோகித்து போட்டிகள் பாதுகாப்பான முறையில் நடத்தப்பட்டது. பள்ளி தாளாளர் ராபர்ட் வின்சென்ட் தலைமை வகித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு ரென்சி கிருஷ்ணமூர்த்தி  பரிசுகளை வழங்கினார். நடுவர்களாக விக்னேஷ், நரேஷ், ஷேக் மீரான், சம்பை கவின்,உம்மர்,  ஞானராஜ், பெண் பயிற்சியாளர்  நஜீமாபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகள் கென்புக்காய் கராத்தே அமைப்பின் நீலகிரி மாவட்ட தலைவர் பாபு தலைமயிலான குழுவினர் செய்திருந்தனர்.

Tags : karate competition ,schools ,
× RELATED தென்மண்டல கராத்தே போட்டி சாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை