×

விதிமுறை மீறி மின்சாரம் பயன்பாடு காட்டேஜ் உரிமையாளருக்கு ரூ.65 ஆயிரம் அபராதம்

குன்னூர், பிப்.18: குன்னூர் சிம்ஸ் பார்க் பகுதியில் தனியார் காட்டேஜில் விதிமுறை மீறி மின்சாரம் பயன்படுத்தி வந்த உரிமையாளருக்கு மின் வாரிய அதிகாரிகள் ரூ.65 ஆயிரம் அபராதம் விதித்தனர். குன்னூர் சிம்ஸ்பார்க் அருகே உள்ள தனியார் காட்டேஜில் முறையான அனுமதியின்றி மின்சாரம் பயன்படுத்தி வருவதாக மின் வாரியத்திற்கு புகார் வந்துள்ளது. அதன் பேரில் குன்னூர் உதவி செயல் பொறியாளர் சிவசங்கரன் உத்தரவின் பேரில் உதவி பொறியாளர் கலையரசி, போர்மென் பிச்சை உட்பட ஊழியர்கள் ஆய்வுகள் மேற்கொண்டனர். அதில் மின்வாரிய விதிமுறைகளை மீறி மின்சாரம் பயன்படுத்தி வந்ததை உரிமையாளர் ஒப்புக்கொண்டார். அதனை தொடர்ந்து மின் வாரிய அதிகாரிகள் காட்டேஜ் உரிமையாளருக்கு ரூ. 65 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Tags : Cottage owner ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...