×

கருமத்தம்பட்டி அருகே நூல் மில்லில் தீ விபத்து

சோமனூர், பிப். 18:  கருமத்தம்பட்டி அடுத்த தனியார் நூல் மில்லில் நேற்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பஞ்சு மற்றும் நூல்கள் எரிந்து நாசமானது. கருமத்தம்பட்டியில் கோவை தேசிய நெடுஞ்சாலையில் சோமனூரை சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான நூல் மில் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. அப்போது 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் பிடித்த தீ மளமளவென பரவி பஞ்சாலை முழுவதும் பற்றி எரிந்தது. தகவலறிந்த சூலூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான  இயந்திரம், நூல் மற்றும் பஞ்சுகள் எரிந்து சாம்பலானது. இது குறித்து கருமத்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Noel Mill ,Karuthampatti ,
× RELATED குண்டும், குழியுமான புத்தனாம்பட்டி- கரட்டாம்பட்டி சாலை சீரமைப்பு