×

ஒண்டிப்புதூர் பஸ் ஸ்டாப்பை புறக்கணிக்கும் மப்சல் பேருந்துகள்

கோவை, பிப்.18: ஒண்டிப்புதூர் பஸ் நிறுத்தத்தில் மப்சல் பேருந்துகள் நிற்காமல் செல்வதால் அப்பகுதி பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
கோவையில்  உள்ள பிரதான பஸ் நிறுத்தத்தில் ஒண்டிப்புதூர் பஸ் நிறுத்தமும் ஒன்று.  திருச்சி - கோவை பிரதான சாலையில் உள்ளதால் இதண் வழியாக நாளொன்றிற்கு  ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் ஒண்டிப்புதூரில் பல பவுண்டரி  தொழிற்சாலைகள், பனியன் கம்பெனிகள் உள்ளிட்டவைகள் இருப்பதால் எந்நேரமும்  போக்குவரத்து நெரிசல் காணப்படும்.

மேலும் மேம்பாலம் முடியும்  இடத்தில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு கரூர், திருப்பூர், மதுரை உள்ளிட்ட  பல பகுதிகளில் இருந்து வரும் அரசு மப்சல் பேருந்துகள் முறையாக நிற்பதில்லை.  டவுன் பஸ்கள் மட்டும் நிற்பதால் அப்பகுதி மக்கள், பள்ளி, கல்லூரி  மாணவர்கள் உள்ளிட்ட பலரும் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதியடைந்து  வருகின்றனர். இதனால் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அதிகாரியை நியமித்து  ஒண்டிப்புதூரில் மப்சல் பேருந்துகள் நிற்பதை கண்காணிக்க வேண்டும் என  அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bus stop ,
× RELATED 1.5 டன் ரேஷன் அரிசி கடத்தியவர்கள் கைது