கோவை, பிப்.18: கோவை மாநகராட்சியில் எம்.ஜி.ஆர். காய்கனி மார்க்கெட், அண்ணா மார்க்கெட், ராமர் கோயில் மார்க்கெட், தியாகி குமரன் மார்க்கெட், காந்திபுரம் மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட் மற்றும் மாநகராட்சி வணிக வளாகங்களை பராமரிக்க நடப்பாண்டிற்கு 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டில் தினமும் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை, குறிப்பாக காய், பழம், இலை கழிவுகளை உரமாக்கும் பணிக்கு சேகரிக்கப்பட்டு வருகிறது. போதுமான குப்பை தொட்டிகள் இல்லாததால் சில இடங்களில் காய்கனி, குப்பைகள் குவிக்கப்படுகிறது. குறிப்பாக அழுகிய பழம், காய்கனிகளை தூக்கி வீசுவதால் துர்நாற்றம் வீசுகிறது.