×

பந்தய புறாக்களை திருடிய 2 பேர் கைது

கோவை, பிப்.18:  கோவை உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்தவர் சண்முகம். இவர் தனது வீட்டில் பந்தய புறாக்கள் மற்றும் சேவல்களை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் வீட்டில் புகுந்த நபர்கள் புறாக்கள் மற்றும் சேவல்களை சாக்கு மூட்டையில் போட்டு திருடி செல்ல முயன்றனர். சேவலின் சத்தம் கேட்டு அங்கே வந்த சண்முகம், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் புறா, சேவல்களை திருடிய 2 பேரை மடக்கி பிடித்து உக்கடம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர்கள் பீளமேடு சக்தி நகரை சேர்ந்த பாலாஜி (25), கமலேஸ்வரன் (20) என தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags :
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ₹14.20 லட்சம் கடத்திய கில்லாடி